×

மரக்கன்று நடும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு

பரமக்குடி,செப்.25:தமிழ்நாடு பசுமை தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் எம்எல்ஏ முருகேசன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு வனத்துறை ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு நேற்று, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட வனத்துறை அலுவலர் ஹேமலதா தலைமை தாங்கினார். பரமக்குடி வனச்சரக அலுவலர் நாகராஜன் வரவேற்றார்.

இதில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் அன்பரசி, வனவர்கள் ராதாகிருஷ்ணன், தேவகுமார், வீராசாமி, கேசவமூர்த்தி, கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

The post மரக்கன்று நடும் விழா: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : MLA ,Paramakudi ,Tamil Nadu Green Day ,Tamil Nadu Government Forest Department Ramanathapuram District ,Green Tamil Nadu Day ,Paramakkudy Assembly Constituency ,Sapling Planting Ceremony ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் எம்எல்ஏ முருகேசன் வழங்கினார்