கிராவல் குவாரியில் பணம் பறித்த 4 பேருக்கு வலை

சிவகங்கை, செப்.25: கிராவல் குவாரியில் வாளை காட்டி மிரட்டி ரூ.1,60,000 கொள்ளையடித்து சென்ற 4பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை அருகே மாடக்கோட்டை கிராமத்தில் கிராவல் குவாரி உள்ளது. இங்கு சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த கேசவன்(49) மேற்பார்வையாளராக உள்ளார். நேற்று கேசவனும் குவாரியில் பணிபுரியும் ஆரோக்கிய திரவியம் என்பவரும் குவாரியில் இருந்தனர்.

நேற்று இரவு டூவீலரில் வந்த 4 பேர் கேசவனையும், ஆரோக்கிய திரவியத்தையும் வாளை காட்டி மிரட்டி குவாரியில் இருந்த ரொக்கம் ரூ.1,60,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

The post கிராவல் குவாரியில் பணம் பறித்த 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: