ரயில் மோதி ஒருவர் பலி

திருப்பூர், செப். 25: திருப்பூர் வஞ்சிபாளையம்-சோமனூர் இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக நேற்று திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே எஸ்.ஐ லோகநாதன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவருக்கு 40 முதல் 45 வயது இருக்கும். அவர் நீல நிற பேண்ட் மற்றும் பச்சை நிற சட்டை அணிந்துள்ளார். உயிரிழந்தவர் யார்? தண்டவாளத்தை கடக்கும் போது உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ரயில் மோதி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: