×

பெண் இன்ஜினியர் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த பிசியோ தெரபிஸ்ட் கைது

கோவை, செப்.25: கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்(68). இவர் பிசியோ தெரபிஸ்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 2023ம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியிலேயே புதிதாக வீடு ஒன்று கட்டி வந்துள்ளார். வீட்டை கட்டுவதற்கு சிவில் இன்ஜினியரான 23 வயது பெண் ஒருவரை பணியமர்த்தியுள்ளார். வீடு கட்டுவது தொடர்பாக ஆனந்த கிருஷ்ணன், பெண் இன்ஜினியரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதற்கிடையே ஆனந்த கிருஷ்ணன், பெண் இன்ஜினியரை தான் வீடு கட்டும் இடத்திற்கு வர வழைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தலைமறைவாகினார்.

இது குறித்து அந்த பெண் இன்ஜினியர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஆனந்த கிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஆனந்த கிருஷ்ணன் கேரளா மாநிலம் இடுக்கியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் இடுக்கி சென்றனர். அங்கு தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண் இன்ஜினியர் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த பிசியோ தெரபிஸ்ட் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ananda Krishnan ,Marudamalai ,Dinakaran ,
× RELATED மருதமலை கோயிலில் ரூ.5.20 கோடியில் லிப்ட் அமைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு