வீட்டின் பூட்டை உடைத்து 46 சவரன் கொள்ளை


தாம்பரம்: பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜன் (59). இவர் கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி தேவி (56). இவர் பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல தர்மராஜன் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவரது மனைவியும் வேலைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவர்களது மகன் அமர்நாத், வீட்டை பூட்டிவிட்டு வேலை சென்றார்.

மாலையில், வேலை முடிந்து தர்மராஜன் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 46 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து, வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 46 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: