இந்த கடையை பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருங்குழி பேரூராட்சியின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள வேறொரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு ரயில்வே இருப்பு பாதையை கடந்து வருகின்றனர். மேலும், அங்கிருந்து ரேஷன் பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வர 200 ரூபாய் கொடுத்து ஆட்டோக்களில் எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பணம், நேரம் வீணாவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்த ரேஷன் கடையினை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் கடையை திறக்க வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, மூடப்பட்டுள்ள ரேஷன் கடையை முற்றுயிட்டு போராட்டம் நடத்தினர்.
The post மூடிய ரேஷன் கடையை திறக்ககோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.