காங்கிரஸ் சார்பில் எச்.ராஜா உட்பட 5 பேர் மீது புகார்

திருவள்ளூர்: தமிழ்நாடு பாஜ பொறுப்பாளர் எச்.ராஜா, ஒன்றிய ரயில்வே இணைய அமைச்சர் ரவணிக்பிட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மகாராஷ்டிரா மாநில எம்எல்ஏ சஞ்சய் கேய்க்வாட், பாஜ தலைவர் தர்வேந்திர சிங் ஆகியோர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை அவதூறாக பேசியுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் ஆலோசனையின் பேரிலும், திருவள்ளூர் நகர காங்கிரஸ் தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த், மாநிலச் செயலாளர் அஸ்வின் குமார் ஆகியோர் திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலினிடம் புகார் கொடுத்தனர். அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் மாயாண்டி, நகர பொருளாளர் பிரவீன், நகரச் செயலாளர் ஹசின் பாஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

The post காங்கிரஸ் சார்பில் எச்.ராஜா உட்பட 5 பேர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: