ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகள், அணித் தலைவர் ஆகியோருக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை அமைச்சர் உதயநிதி வழங்கினார். அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் வாழ்த்துப் பெற்றனர்.

The post ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Related Stories: