இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மதுரை, கோவை தீர்ப்பாயங்களில் அதிகாரி இல்லை என்பதால் கேரள எர்ணாகுளம் கடன் வசூல் மையத்திற்கு மனுதாரர்களை செல்ல சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. மத்திய அரசின் இந்த செயல்பாடு கடன் வசூல் தீர்ப்பாயங்களை அழிப்பதுபோல் உள்ளது. கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம். கடன் தீர்ப்பாயத்தின் நிலை குறித்து ஒன்றிய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்,”என காட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து, நீங்கள் கூறும் கருத்துகளை செய்தியாக வெளியிட்டு விடுவார்கள் என்று ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்ததற்கு, ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கூட தீர்வு காணப்படுமா என்று பார்ப்போம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருச்சி கனரா வங்கியின் ஏல நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
The post கடன் தீர்ப்பாயத்தை நடத்த முடியவில்லை என்றால் கூறிவிடுங்கள், நாங்களே நடத்திக் கொள்கிறோம் : ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.