அக்.3ம் தேதி காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம், 10ம் திருநாளான வரும் அக்.12ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணி, 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் முன்பாக எழுந்தருளி மகிஷாசூரனை சம்ஹாரம் செய்கிறார்.
The post குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் அக்.3ம் தேதி தசரா திருவிழா கொடியேற்றம்: 12ம் தேதி நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம் appeared first on Dinakaran.