இதைத்தொடர்ந்து பைக் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 3 வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த சதீஷ் (23), ஜெய் கிஷோர் (21), இலுப்பைதண்டலத்தை சேர்ந்த சுமன் (23) என்பதும் ஆந்திர மாநிலம் நகரியில் குறைந்த விலைக்கு குட்கா புகையிலை பொருட்கள் வாங்கி அரக்கோணம் பகுதியில் கடைகளில் விற்பனைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.