இதில் ஹிஸ்புல்லா தளபதி உட்பட 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நேற்றுமுன்தினம் இஸ்ரேலின் ஹைபா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கினர். இஸ்ரேலுடன் இனி நேருக்கு நேர் போரிட முடிவு செய்துள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்தது. இந்த நிலையில், லெபனான் மீது நேற்று இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. லெபனான் மீது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், பலியானவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கி உள்ளது. 35 குழந்தைகள், 58 பெண்கள் உள்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,645 பேர் காயமடைந்து உள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இரவோடு இரவாக 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.இஸ்ரேலின் ராணுவ, விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பல ஆண்டுகளுக்கு பின் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிக பெரிய தாக்குதல் இதுவாகும்.
The post லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை.. பலி எண்ணிக்கை 492 ஆக அதிகரிப்பு : ஹிஸ்புல்லா 200 ராக்கெட்டுகளை ஏவி பதிலடி appeared first on Dinakaran.