மக்கள் குறைதீர் கூட்டம் ரூ44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்

திருவாரூர், செப்.24: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 394 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் மகளிர் நில உடைமைத்திட்டத்தின்கீழ் தலா ரூ. 5 லட்சம் வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மான்யத்தொகைக்கான ஆணையினையும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள காய்கறி விற்பனை வண்டியினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக தமிழ்நாடு நலவாரிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையினையும், மற்றும் 4 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 41ஆயிரம் நவீன செயற்கை கால்கள் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு, வழங்கினார்.

கூட்டத்தில் டிஆர்ஓ சண்முகநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வமாலா, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் நீதிமாணிக்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மக்கள் குறைதீர் கூட்டம் ரூ44 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: