×

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை


திருமலை: ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 14 பேர் நேற்று முன்தினம் ஜலதரங்கிணி அருவிக்கு சென்று ந குளித்துகொண்டிருந்தனர். அப்போது அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைபார்த்த சக நண்பர்கள் அலறி கூச்சலிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 பேரை மீட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹரதீப்(20), சவுமியா(21), அமிர்தா(21) ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

The post அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Alluri Sitarama Raju district ,Andhra Pradesh ,MBBS ,Ellore ,
× RELATED பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்...