தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வியாபாரி பரிதாப பலி

ஆவடி: தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதியதில் வியாபாரி பலியானார். ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலைய நடை மேம்பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் செங்குன்றம், அண்ணா நகர், கரிகாலன் தெருவைச் சேர்ந்த ஜெயராம்(27) என்பதும் இவர் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிய வந்தது. சுற்றுவட்டார பகுதியில் பைக்கில் சென்று ஜெயராம் பெருங்காயம் விற்பனை செய்து வந்தார். சம்பவத்தன்று, மருத்துவமனைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர், இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. இறந்த ஜெயராமுக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

The post தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி வியாபாரி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: