எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு

டெல்லி: எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என டெல்லி காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார். மக்களவை, மாநிலங்களவை மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார். சட்டமன்றத்தில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகள் ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.

The post எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Related Stories: