மகள் விதவையானதால் விரக்தி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வெங்காய வியாபாரி தற்கொலை

*திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஜோலார்பேட்டை : மகள் விதவையானதால் மன விரக்தியில் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் தந்தை ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் நேற்று காலை சரக்கு ரயில் வந்தபோது திடீரென பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில் நிலைய அதிகாரி தேவி சரண் மீனா ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய போலீசாருக்கு புகார் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உடல், தலை என இரண்டாக இறந்து நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சுலைமான் தெரு பகுதியை சேர்ந்த பாபு மகன் அஷ்ரப் பாபு(50) என்பதும், இவர் திருப்பத்தூரில் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஷகிலா என்ற மனைவியும், 6 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மேலும் இவரது ஒரே மகளான நஸ்ரின் என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கவுஸ் என்பவருக்கு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது மருமகன் கவுஸ் கடந்த 19ம் தேதி ஓசூரில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மகள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அஷ்ரப் பாபு மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார்.

நேற்று காலையிலிருந்து மது போதையில் நான் எதற்கு இருக்க வேண்டும் என பேசிக் கொண்டிருந்தவர் வீட்டில் இருந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தவர் ரயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் கூட்ஸ் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதும், இவர் தனது தந்தை தான் என இவரது மகன் முபாரக் உறுதி செய்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே மகளை விதவை கோலத்தில் பார்ப்பதா? என கருதி மன விரக்தியில் தந்தை ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

The post மகள் விதவையானதால் விரக்தி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வெங்காய வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: