இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் அந்த பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு தெரு விளக்குகள் பொறுத்தப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சிவகாமி தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகர் மன்ற துணை தலைவர் நாகராசு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் புவனேஷ்வரி செல்வராஜ் வரவேற்று பேசினார்.
நிகழ்வில் திமுக வார்டு செயலாளர் தில்லை நாதன், முன்னாள் செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் ஹரிதாஸ், விஜயரத்தினம், ஜெயராமன், கணேசன், பொன்னுதுரை, மயில் வாகனன், முருகா, ஜீவா, சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 40 ஆண்டுக்கு பின் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
The post தேவாலா மாமுன்டி காலனியில் 40 ஆண்டுக்கு பின் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.