* சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு பயன்படுத்திய விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோரி இந்து சேனா அமைப்பின் தலைவரும், விவசாயியுமான சுர்ஜித் சிங் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியது இந்து மதத்தை அவமதித்துள்ளது, புண்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
The post திருப்பதியில் இன்று சிறப்பு சாந்தி யாகம் appeared first on Dinakaran.