×

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடி விபத்தில் 34 பேர் பலி

தெஹ்ரான்: தலைநகர் தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 540 கி.மீ. தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு 70 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கத்துக்குள் மீத்தேன் வாயு கசிந்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் பணியாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் சுரங்க இடிபாடுகளில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடி விபத்தில் 34 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : TEHRAN ,CAPITAL ,Tapas ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் இருந்து கடத்திச்...