நேற்று காலை தோட்டத்திற்கு வந்த வீரன், காட்டுமாடுகள் கிணற்றில் விழுந்திருப்பதை கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து காட்டு மாடுகள் மேலே ஏறி வர ஏதுவாக கிணற்றின் ஒருபக்க மண்ணை சரித்து விட்டனர். அதன்பின் 5 காட்டுமாடுகளும் அதன் மீது ஏறி மேலே வந்து காட்டுக்குள் சென்றன. கிணற்றில் தவறி விழுந்ததில் 2 காட்டு மாடுகளின் உடலில் காயங்கள் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post சாணார்பட்டி அருகே கிணற்றில் தவித்த காட்டுமாடுகள் மீட்பு: தண்ணீர் தேடி வந்த போது தவறி விழுந்தது appeared first on Dinakaran.