கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் அருகே 76 வயதான மனைவியை, 84 வயதாகும் கணவர் சுத்தியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி புளோராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அடிக்கடி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மனைவியை, கணவர் சாம் அலெக்ஸாண்டர் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார்.