நொய்டாவில் பரபரப்பு: கார் மோதியதில் மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளம் பெண்

நொய்டா: உபி மாநிலம், நொய்டாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று காஜியாபாத்துக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தில் வந்த போது வேகமாக வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அந்த பெண் துாக்கி வீசப்பட்டார். அதிர்ஷ்டவசமாக மேம்பாலத்திற்கு பக்கத்தில் உள்ள துாண் மீது விழுந்ததால் அவர் உயிர் தப்பினார். கீழே உள்ள சாலையில் விழுந்திருந்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மேம்பால துாணில் அந்த பெண் சிக்கி கொண்டதை பார்த்த 2 வாலிபர்கள் மேம்பாலத்தில் இருந்து தூணில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றனர். மூன்று பேரும் அதில் இருந்து இறங்க முடியாமல் சிக்கி தவித்தனர். இதை பார்த்த ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

The post நொய்டாவில் பரபரப்பு: கார் மோதியதில் மேம்பாலத்தில் தூக்கி வீசப்பட்ட இளம் பெண் appeared first on Dinakaran.

Related Stories: