இதையடுத்து, 35 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்துள்ளது. கருணரத்னே 83 ரன், சண்டிமால் 61 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். நிசங்கா 2, கமிந்து 13 ரன்னில் வெளியேறினர். ஏஞ்சலோ மேத்யூஸ், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா தலா 34 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் ஓ’ரூர்கே 3, அஜாஸ் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, இலங்கை அணி 202 ரன் முன்னிலையுடன் இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.
The post 2வது இன்னிங்சில் போராடுகிறது இலங்கை: கருணரத்னே, சண்டிமால் அரை சதம் appeared first on Dinakaran.