இவர் கோவை செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்களை கடந்த 6 மாதங்களாக பின் தொடர்ந்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பே வடகோவை ரயில் நிலையத்தில் இதுபோன்று பெண்களை புகைப்படம் எடுத்தபோது பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.