×

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி


டெல்லி: நடிகை ஜாக்குலினுக்கு சிறை கைதி சுகேஷ் சந்திரசேகர், பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பணமோசடி வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ஜாக்குலின் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரவு பகலாக உனது நினைவாகவே உள்ளேன். தூக்கமின்றி தவிக்கிறேன். சிறைக்குள் நேரத்தை கழிப்பது என்பது கடினமாகி வருகிறது. கிரண் ராவின் லாபட் லேடீஸ் படத்தின் சஜ்னி பாடலை உனக்கு அர்ப்பணிக்கிறேன். அதில் வரும் ஒவ்வொரு வரியும் மிகவும் பிரமாதமாக உள்ளன.

நமது இருவரின் இதயமும் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே துடிக்கிறது. உன்னுடனான காதல், இன்றைய ரோமியோ ஜூலியட்டின் காதல் கதையை ேபான்றது. நம்முடைய காதலுக்கு தடைகள் ஏதும் இல்லை. உன்னை விட்டு விலக மாட்டேன் ஜாக்குலின். மீண்டும் இருவரும் ஒன்றாக இருப்போம்’ என்று எழுதியுள்ளார். ஆனால் நீதிமன்ற விசாரணையில் தனக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

The post சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி appeared first on Dinakaran.

Tags : Jacqueline ,Delhi ,Sukesh Chandrashekar ,Sukesh Chandrashekhar ,Delhi Tigar ,Bollywood ,Jacqueline Fernandez ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!