திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் இதய நோய் சிறப்பு மருத்துவ முகாம்

 

திருச்சி, செப்.21: திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவனை ஆகியன இணைந்து நடத்தும் 2 நாட்கள் இலவச இதய நோய் மருத்துவ முகாம் திருச்சி கோர்ட் வளாக வக்கீல்கள் சங்கத்தில் நேற்று துவங்கியது. முகாமை, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி துவக்கி வைத்தார். அப்போலோ மருத்துவமனையிின் மூத்த இதய நோய் சிகிச்சை சிறப்பு டாக்டர்கள் ஷியாம் சுந்தர் மற்றும் விஜய் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், ஆர்பிஎஸ் ரத்த சர்க்கரை அளவு, இசிஜி, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, எக்கோகார்டியோகிராம், எடை சரிபார்த்தல் உள்ளிட்ட பரிசோனைகளுடன், இதய டாக்டரின் ஆலோசனை கண் மற்றும் பல் மருத்துவம் தொடர்பான பரிசோனைகள் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. முன்னதாக வக்கீல்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.

துணைத் தலைவர் மதியழகன், இணை செயலாளர்கள் அப்துல் சலாம், சந்தோஷ் குமார் உட்பட ஏராளமான வக்கீல்கள் முகாம் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். வக்கீல்கள் சங்க செயலாளர் சுகுமார் நன்றி தெரிவித்தார்.இந்த முகாம், இரண்டாவது நாளாக இன்று (செப்.21) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சி மாவட்ட கோர்ட் வளாகத்தில் இதய நோய் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: