வாலிபருக்கு திருமணம் ஏற்பாடு மணப்பெண்ணும், காதலியும் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை: வீடியோ வைரல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கும், தரங்கம்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக இரு வீட்டார் பேசிக்கொண்டனர். இரு வீட்டாரின் பெற்றோர், நெருங்கிய நண்பர்கள் என்பதால் திருமணம் செய்து வைக்க அதற்கான ஏற்பாடுகள் இரு வீட்டார் தரப்பிலும் தடல்புடலாக நடந்தது. இது ஒரு புறம் இருக்க, அந்த இளைஞர் தனியார் கடையில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நர்சிங் பெண்ணுடன் காதலன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக காதலிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நர்சிங் பெண்ணிடம், அந்த வாலிபரின் காதலி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போகவே பேருந்து நிலையத்திலேயே இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.

இதில் காதலி, நர்சிங் மாணவியை சரமாரியாக தாக்கினார். தலை முடியை பிடித்து இழுத்து தரையில் புரட்டி, புரட்டி எடுத்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். 2 பெண்கள் சண்டை போடும் வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வைரலானது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வாலிபருக்கு திருமணம் ஏற்பாடு மணப்பெண்ணும், காதலியும் நடுரோட்டில் குடுமிபிடி சண்டை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: