×

பர்கூர் மலைப்பாதையில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்


அந்தியூர்: பர்கூர் மலைப்பாதையில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர்தப்பினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மதுரை செல்வதற்காக வேன் ஒன்று நேற்றிரவு வந்து கொண்டு இருந்தது.

அந்தியூர் பர்கூர் ரோட்டில் வரட்டுப்பள்ளம் டேம் அருகே துளசி மாடம் பெருமாள் கோயில் வளைவில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்த டிரைவர் நடராஜ் (29) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சாலையோரம் வேன் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பர்கூர் மலைப்பாதையில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Barkur hill road ,Andiyur ,Barkur hill ,Madurai ,Hassan ,Karnataka ,Parkur hill pass ,Anthiur ,Erode district ,Parkur hill ,
× RELATED அந்தியூர் மக்களின் நீண்டநாள்...