×

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை: தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடிவிடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன; அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்? புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா?; தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா?. தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் வசதிகளே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவு அளித்துள்ளது.

The post தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,High Court Madurai ,Madurai ,High Court Madurai branch ,Dinakaran ,
× RELATED கூல் லிப் போதைப்பொருளை பாதுகாப்பற்ற...