கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுடன் கைது

வில்லிபுத்தூர், செப்.20: வில்லிபுத்தூரில் கஞ்சா பொட்டலங்களுடன் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். வில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் நேற்று மதுரை சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வந்த இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.8,000 மதிப்புள்ள கஞ்சா மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

The post கல்லூரி மாணவர்கள் கஞ்சாவுடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: