சோழிங்கநல்லூர் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், உங்களது பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இதுகுறித்து அருகிலுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதுபற்றி, காவல் ஆய்வாளர் கிளாட்சன்ஜோஸ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்து, பள்ளி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கிவில்லை. இதையடுத்து, அந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post சோழிங்கநல்லூர் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: