அப்போது, அங்கிருந்த கார் ஒன்றில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நியூயார்க் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து எந்த மாதிரியான வெடிப்பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. கடந்த 15ம் தேதி புளோரிடாவில் ட்ரம்பிற்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் விளையாடி கொண்டு இருந்த போது, துப்பாக்கிச் சூடு நடத்திய 58 வயது நபரை ரகசிய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அந்த சம்பவம் நடந்த 3வது நாளிலேயே ட்ரம்ப் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே வெடிப் பொருட்கள் இருப்பதாக பரவிய செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? : நியூயார்க் போலீசார் விளக்கம் appeared first on Dinakaran.