காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பெண்கள், வயதானவர்கள், இளம் வாக்காளர்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காஷ்மீர் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற அழைப்பு விடுத்தனர். கடந்த சில நாட்களாக காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் தேர்தல் அமைதியாக நடந்தது. பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பிஜ்பெஹாரா, டி.எச்.போரா பகுதிகளில் சிலர் மோதிக் கொண்டதைத் தவிர பதற்றமான எந்த சம்பவமும் நடக்கவில்லை. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், முதல் கட்ட தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த இரு கட்டமாக வரும் 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடத்தப்படும். அக். 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
The post நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர் காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது: 59 சதவீத வாக்குகள் பதிவானது appeared first on Dinakaran.