உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாஜிஸ்திரேட் ஒருவர் துன்புறுத்துவதாக அலிகரில் உள்ள பன்னாதேவி காவல் நிலைய எஸ்.ஐ சச்சின்குமார் புகார் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தை திருடியதாக கைது செய்யப்பட்ட 5 பேரை எஸ்.ஐ சச்சின்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். 5 பேரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் எஸ்.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: