நெல் நாற்றுகளை நேர்த்தியாக கொண்டுவர, கையாலும், ஸ்பிரே இயந்திராத்தாலும் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தற்போது, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பல இடங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அந்த இடங்களில் தற்போது நாற்றுகள் செழிப்படைந்து நெல் விளைச்சல் துவங்கி பச்சை பசேல் என இருப்பதால், இன்னும் சில மாதங்களில் நெல் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ஆனைமலை பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் appeared first on Dinakaran.