இந்த நிலையில், லெபனான் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் கையடக்கப் பேஜர்கள் வெடித்ததில் ஹிஸ்புல்லா குழுவினர் உட்பட 8 பேர் பலியானார்கள். ஈரான் தூதர் உள்பட 2750 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாடின் கைவரிசை இருக்கும் என குற்றம் சாட்டப்படுகிறது. பேஜர் வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டி உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர், கோழைத்தனமான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் தொலைக்காட்சி மூலம் வெளியிடப்பட்டுள்ள ஆடியோ பதிவில், இஸ்ரேலின் தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை ஒரு போதும் குறைத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையான்மை மீது தாக்குதல் என்று சாடி உள்ள அந்த நாட்டு அரசு, இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் பேஜர் வெடிப்பு தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்து வருகிறது. இதனிடையே பேஜர் வெடிப்பு தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ள அமெரிக்கா, இது குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
The post பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை; தக்க பதிலடி கொடுக்கப்படும் : ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.