பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

சென்னை: பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம் என என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈராயிரம் ஆண்டு மடமைக்கு எதிரான ஈரோட்டுப் பூகம்பம்; பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் இன்று. அநீதிகளையும், மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவு கொண்டு சுட்டெரித்த சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார். தந்தை பெரியார் இன்றைக்கும் என்றைக்கும் நம் தமிழ்நாட்டின் அடையாளம். உடலால் மறைந்தாலும் என்றும் மறையாத, எக்காலமும் பொருந்தும் திராவிட தத்துவமாய் நம்மோடு வாழ்கிறார். பெரியாரின் கருத்துகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்னும் வேகத்தோடும், ஆழத்தோடும் கொண்டு சேர்க்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.

The post பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: