×

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மகன் சக்திவேல் (17). நாமக்கல், தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேலின் தங்கை நிஷாலினி (15). கடந்த மாதம் 25ம் தேதி அப்பகுதியில் உள்ள வயலில் மாடு மேய்க்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் சக்திவேல் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் மேற்கூரையில் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தா.பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tha.pettai ,Mayakannan ,Paithamparai ,Tha.pettai, Trichy district ,Sakthivel ,Namakkal ,Shaktivel ,Nishalini ,
× RELATED எனக்கும், தமிழகத்துக்குமான காதல்...