தங்கம் விலை சவரனுக்கு ரூ.55 ஆயிரத்தை தாண்டியது: 3 நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,880க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,040க்கும் விற்கப்பட்டது. பண்டிகை நேரத்தில் விலை அதிகரிப்பால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 13ம் தேதி நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கு விற்கப்பட்டது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் மறுநாளான 14ம் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,920க்கு விற்கப்பட்டது.

15ம் தேதி (நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை தினம் என்பதால் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் உயர்வைத்தான் பார்க்க முடிந்தது. அதாவது நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,880க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,040க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் மற்றும் பண்டிகை நேரத்தில் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

The post தங்கம் விலை சவரனுக்கு ரூ.55 ஆயிரத்தை தாண்டியது: 3 நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது appeared first on Dinakaran.

Related Stories: