×

கல்பாக்கம் அருகே மூதாட்டி கொலை

சென்னை: கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (70), இவர் கல்பாக்கம் அடுத்த பொம்மராஜபுரம் கிராமத்தில் வந்து தங்கி இட்லி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீடு நேற்று இரவு நீண்ட நேரமாக வெளி தாழ்பாளிட்டு இருந்ததால், அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து பார்த்த போது மூதாட்டி கன்னியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அக்கம், பக்கத்தினர் சதுரங்கப்பட்டினம் போலீசார் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள அவரது பேரன் நாகராஜ்க்கு தகவல் கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இறந்துப் போன கன்னியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து போன கன்னியம்மாள் எப்போதும் அணிந்திருக்கும் நகைகள் காணாமல் போயிருந்தது. இதையடுத்து அவர் அணிந்திருந்த நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து விட்டு மூதாட்டியை கொலை செய்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கல்பாக்கம் அருகே மூதாட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Kalpakkam ,Chennai ,Kanniyammal ,Pommarajapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் 5 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்