புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் தற்கொலை செய்துகொண்டார். நாளை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் கைதி விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென மாயமானர். சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், 5ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து சிறுமியின் உடலை சடலமாக போலீசார் மீட்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59) என்ற முதியவரும், கருணாஸ் (18) என்ற இளைஞரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கடந்த மார்ச் 6ம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தினார். இதனிடையே சிறுமி உடலை பிரதே பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை அதன் அறிக்கையினை போலீசாருக்கு அளித்தனர். இந்நிலையில், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், விவேகானந்தன் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனைப்பார்த்த சக கைதி, கருணாஸ் சத்தம் போட்டதும், சிறை வார்டன் ஓடி வந்து விவேகானந்தனை காப்பாற்றி எச்சரித்துள்ளார். இது குறித்து சிறை கண்காளிப்பாளர், விவேகானந்தன் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தது வருவதாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இன்று விவேகானந்தன் தற்கொலை செய்துகொண்டார். நாளை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் கைதி விவேகானந்தன் சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கைதி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: