தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும்,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல், திருச்சி, கரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: