சென்னை: கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ராதாகிருஷ்ணன் என்பவர் அளித்த மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.