தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி

தேனி: தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. அதற்காக சின்னமனூர் மார்க்கயன்கோட்டை ஆற்றுக்கு டிராக்டரில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், சிலையை கரைத்துவிட்டு அனைவரும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது லட்சுமிநாயக்கன்பட்டி சிந்தலைசேரி சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த தமிழன் மகன் நிவாஷ் (12), பிரபு மகன் கவிகிஷோர் (12) மற்றும் உத்தமபாளையம் பிடிஆர் காலனியைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் விஷால் (13) ஆகிய 3 சிறுவர்கள் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post தேனி மாவட்டம் அருகே விநாயகர் சிலை கரைத்து திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 3 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: