நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக பக்கத்துக்கு வீட்டில் உள்ள தங்கம் என்பவர் குழந்தையை கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையில் காணாமல்போன குழந்தை சஞ்சு, தங்கம் என்பவர் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.