விழுப்புரம் அரசு பள்ளியில் பயின்றவர்தான் இஸ்ரோவில் இருக்கும் வீரமுத்துவேல் : ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

விழுப்புரம் : தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “உயர்கல்வியில் தமிழ்நாட்டில் உள்ளதை போல எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளோம். தமிழ்நாட்டில் பாடத்திட்டத்திற்கு தனியாக குழு அமைக்கப்பட்டு அறிவியல் ரீதியான பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளோம். பன்னாட்டு அளவில் தமிழ்நாட்டின் கல்வி தரம் உயர்ந்துள்ளதை தெரியாமல் சிலர் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

மாநில பாடத்திட்டத்தில் எந்தக்குறையும் இல்லை. இருமொழிக் கொள்கையால் தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது.மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. அரசு பள்ளிகளின் தரம் சிறப்பாக இருப்பதால் பலர் உயர்ந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.விழுப்புரம் அரசு பள்ளியில் பயின்றவர்தான் இஸ்ரோவில் இருக்கும் வீரமுத்துவேல். கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post விழுப்புரம் அரசு பள்ளியில் பயின்றவர்தான் இஸ்ரோவில் இருக்கும் வீரமுத்துவேல் : ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: