×

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்; நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Neduntivu ,Rameshwaram ,Tamil Nadu ,Sri Lanka Navy ,Nedundivu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை