போர்க்கால அடிப்படையில் காலி மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டன. சுமார் 31,250 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. எனவே, உடனடியாக தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

The post போர்க்கால அடிப்படையில் காலி மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி appeared first on Dinakaran.

Related Stories: