இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பலியானவர்கள் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் (35), கோழிக்கோடை சேர்ந்த ஐஸ்வர்யா (28) என்பதும், காதலர்களான இவர்கள் வேலை தேடி நேற்று முன்தினம் காலை சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது. இரவு நண்பரின் வீட்டில் தங்குவதற்காக இருவரும் சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக பேசிக்கொண்டே கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில் பலியான ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
The post பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்தபோது மின்சார ரயிலில் சிக்கி கேரள காதல் ஜோடி பலி:வேலை தேடி சென்னைக்கு வந்தவர்கள் appeared first on Dinakaran.